உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று இன்று தொடக்கம்

 
ZIM

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது.
 
13-வது 50 ஓவர் (ஒருநாள்) உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 05ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10ம் அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக லீக் போட்டியில் விளையாடவுள்ளன. ஆனால் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட அணிகள் நேரடியாக தகுதி பெற முடியவில்லை. இதன் காரணமாக தகுதி சுற்றில் வெற்றி பெற்று லீக் போட்டிக்குள் நுழைய வேண்டும்.  எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 

இந்நிலையில், தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் இன்றூ தொடங்குகின்றன. ஜூலை 9-ந் தேதி வரை நடைபெறும் தகுதி சுற்று ஆட்டத்தில 10 நாடுகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இதில், ஏ பிரிவில் மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, நேபாளம் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஏமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்று உள்ளன. இந்தப் போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இன்று இரண்டு தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதில் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் அணிகளும், இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.