உலக கோப்பை கிரிக்கெட் - இன்றைய லீக் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதல்!

 
SRI vs IRE

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 37 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி இந்திய அணி 8 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதோடு அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 4 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.   

BAN

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 38வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியானது டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இலங்கை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட அடுத்த அணிகளின் முடிவை பொறுத்தே அரையிறுதி வாய்ப்பு உண்டாகும். ஆகையாக் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றாக வேண்டும். வங்கதேச அணியை பொறுத்தவரையில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. ஆகையால் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய அந்த அணி முயற்சிக்கும்.