இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது!

 
indvssa

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை அடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு  வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கிறார். இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கடந்த 10ம் தேதி தொடங்கியது. மழை காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது. டாஸ் கூட போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. 

INDvsSA

இந்த நிலையில், இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. தென் ஆப்ரிக்காவில் உள்ள  கெப்ரா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஏற்கனவே முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். ஆகியால் இரு அணி வீரர்களும் தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.