இந்திய அணி சிறப்பான ஆட்டம் - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்கள் இலக்கு

 
IND

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
 
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 115.4 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் அனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

IND

இதனை தொடார்ந்து 183 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அதிரடி காட்டியது. கேப்டன் ரோகித் சர்மா 35 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜெய்ஸ்வால் 38 ரன்களில் வெளியேறினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இஷான் கிஷான் 52 ரன்களும், சுப்மன் கில் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டடது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வழக்கம் போல் திணறியது. 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 எடுத்தது. வெற்றிக்கு இன்னும் 289 ரன்கள் தேவைப்படும் நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.