இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது!

 
IND

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனால்  இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனையடுத்து டி20 தொடரில் விளையாடவுள்ளது. 


இந்த நிலையில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி அந்நாட்டின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனையொட்டி இரண்டு அணி வீரர்களும் தீவிர வளைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பைக்கு தயாராக இந்த ஒருநாள் தொடர் முக்கியம் என்பதால் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.