இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் - நாளை தொடக்கம்

 
ind

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.  

இந்திய அணி இந்த மாதம் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5, 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12 முதல் 16 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20 முதல் 24 வரையும் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  டி20 போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி டெஸ்ட் போட்டிகள் இரவு 7.30 மணிக்கும், ஒருநாள் போட்டிகள் இரவு 7 மணிக்கும், 20 ஓவர் போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். இதேபோல் டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார்.

West inides


 
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 08ம் தேதி அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியின் கேப்டனாக க்ரேய்க் ப்ராத்வெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. நாளை முதல் 16ம் தேதி வரை முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.