ரோகித் சர்மா, ஜெய்ஷ்வால் சதம் விளாசல் - இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை

 
IND

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய அந்த அணி தொடக்கம் முதலே தடுமாறியது. தொடக்க வீரர்கள் டேகனரின் சந்தர்பால் 12 ரன்களும் , கேப்டன் கிரேக் பிராத்வைட் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரேமன் ரைபர் 2 ரன்கள் , ஜெர்மைன் பிளாக்வுட் 14 ரன்கள் , ஜோசுவா டா சில்வா 2 ரன்கள் , ஜேசன் ஹோல்டர்18 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக அந்த அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும் , ஜடேஜா 3 விக்கெட்டுகளூம் , ஷார்துல் தாகூர் , சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெடையும் வீழ்த்தினர். 

ind

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.  தொடக்க வீரர்களாக  களமிறங்கிய்கேப்டன் ரோகித் சர்மா , அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் மற்றும் ஜெய்ஷ்வால் இருவரும் சதம் விளாசினர். ரோகித் சர்மா 103 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த வந்த சுப்மன் கில் 6 ரன்களிலேயே வெளியேறினார். இதனையடுத்து களத்திற்கு வந்த விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஷ்வால் 143 ரன்களும், விராட் கோலி 36 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.