சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது - ஹர்திக் பாண்டியா!

 
Hardick

சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது என இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். 

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது டி-20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு, 17 ஓவர்களிலேயே இலங்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்திய அணி வீரர்கள் ஜெய்ஸ்வால் - 84 ரன்களும்,  ஷுப்மன் கில் 77 ரன்களும் எடுத்தனர். இதனால்  5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  

ind


 
போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்த போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினர். பேட்ஸ்மேன்கள் இவ்வாறு விளையாடுவது பந்து வீச்சாளர்களுக்கும் பெரிய அளவில் உதவியைத் தரும். அதோடு பந்துவீச்சாளர்கள் எப்போதுமே போட்டியை வெற்றி பெற்று தரக்கூடியவர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. இவ்வாறு கூறினார்.