போர் பதற்றம்! ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைப்பு!
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுவரை 57 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று இரவு நடைபெற்ற டெல்லி-பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான தொடர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.


