ஐபிஎல் கிரிக்கெட் தொடர் - இன்றைய போட்டியில் குஜராத்-பஞ்சாப் மோதல்!

இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
18வது சீசன் ஐபிஎல் கிர்க்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. நேற்று முன் தினம் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற நாலாவது லீக் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்று 5வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. 5வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்குமே இது முதல் போட்டி என்பதால் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளுமே முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.