முதல் ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் தேர்வு

 
toss

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் மார்க்ராம் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கிறார்.  இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதனிடையே இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடயிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ஜோனஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் மார்க்ராம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பந்துவீசவுள்ளது.

IND

இந்திய அணி: கே.எல்.ராகுல்(கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 
 
தென் ஆப்ரிக்க அணி :
ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஜோர்ஜி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் , டேவிட் மில்லர், வியான் முல்டர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மஹாராஜ், நந்த்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி உள்ளிட்டோர் தென் ஆப்ரிக்க அணியில் இடம்பெற்றுள்ளனர்.