ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பு!...சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணியும், இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதேபோல் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சென்னை அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில் குஜராத் அணியுடன் கடைசி வரை போராடி தோற்றது. இதேபோல் இரண்டாவது போட்டியில் லக்னோ அணியிடம் போராடி வென்றது. பேட்டிங்கில் வலுவாக உள்ள சென்னை அணி பந்துவீச்சில் சொதப்பி வருகிறது. ஆகையால் இன்றைய போட்டியில் அதனை சரிசெய்துகொண்டு மீண்டும் வலுவாக திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மும்பை அணியை பொறுத்தவரையில் தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியிடம் படுதோல்வி அடைந்தது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற அந்த அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.