ரசிகர்கள் உற்சாகம்! - ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்

 
kkr

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறாவுள்ளன. 

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று இரவு தொடங்கியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனயடுத்து முதலாவதாக பேட்டி செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இன்றைய நாளில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறவுள்ள லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதேபோல் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.