4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றி!

 
INDvsWI

இந்திய அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் 2க்கு 01 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் ஒண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 41 ரன்கள் எடுத்தார். 

indvswi

இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே சற்று நிலைத்து நின்று ஆடிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் 3 ரன்களிலும், இஷான் கிஷன் 6 ரன்களிம், திலக் வர்மா 39 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 21 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 ரன்களிலும் வெளியேறினர். சஞ்சு சாம்சன் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.