எங்களின் தோல்விக்கு இது தான் காரணம் - மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பேட்டி

 
wi

மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை என மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கூறியுள்ளார். 

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது டி-20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு, 17 ஓவர்களிலேயே இலங்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்திய அணி வீரர்கள் ஜெய்ஸ்வால் - 84 ரன்களும்,  ஷுப்மன் கில் - 77 ரன்களும் எடுத்தனர். இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  

ind

தோல்வி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கூறியதாவது:  மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நாங்கள் முன்னேறினால், நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். இப்போதைக்கு 2-2 என்ற நிலையில் உள்ளோம்.  இறுதிப் போட்டியில் நான் மேற்கிந்தியத் தீவுகளை ஆதரிப்பேன். வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். இவ்வாறு கூறினார்