இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

 
WI

இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனால்  இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி அந்நாட்டின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்திய அணி  வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடயிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

WI

இதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர் வரும் ஆக்ஸ்ட் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அணிக்கு ரோய்வம் பவல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷாய் ஹோப் மற்றும் ஓஷேன் தாமஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தொடரில் இடம் பெறாத பூரன், ஹோல்டர் ஆகியோர் டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.  

மேற்கிந்திய தீவுகள் அணி: ரோவ்மன் பவல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் , ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகெல் ஹோசைன், அல்ஜாரி ஜோசப், பிரண்டன் கிங், ஓபெட் மெக்காய், நிகோலஸ் பூரன், ரொமெரியோ ஷெப்பர்ட், ஓடேன் ஸ்மித், ஓஷேன் தாமஸ் உள்ளிட்டோர் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.