உலக கோப்பை கிரிக்கெட் - இன்றைய போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதல்!

 
IND

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 32 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இது வரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி தென் ஆப்ரிக்க அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் விளையாடி 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ரன்ரேட்டில் பின் தங்கியுள்ளதால்  புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 4 வெற்றி 3 தோல்வியுடன் 4வது இடத்தில் உள்ளது.   

IND

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 33வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் எளிதில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடலாம். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள இலங்கை அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உண்டாகும். ஆகையால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.