உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - ஆஸ்திரேலியா திணறல்

 
ind

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.  
 
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. ரஹானே மற்றும் ஜடேஜாவின் ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இறுதியில் இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஹானே 89 ரன்களும், சர்தூல் தாகூர் 36 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. வார்னர்(1) மற்றும் கவாஜா(13) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்தார்.   இதையடுத்து களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் ஜடேஜா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. லபுஸ்சன் 41 ரன்களும், க்ரீன் 7 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.