முடங்கிய வாட்ஸ் ஆப் சர்வர்...பயனாளர்கள் பெரும் அவதி!

 
whatsapp

வாட்ஸ் ஆப் செயலியின் சர்வர் முடங்கியதால் உலகம் முழுவதும் உள்ள அதன் பயனாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். 

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.  இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதுப்புது வசதிகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில்,  வாட்ஸ் ஆப் செயலியின் சர்வர் முடங்கியதால் பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சர்வர் முடங்கியுள்ளது. இதனால் பயனாளர்கள் குருஞ்செய்தி, வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட எந்தவொரு தகவல் பரிமாற்றமும் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.