மிக்ஜாம் புயல் - குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கிக்கணக்குகளில் ரூ.6 ஆயிரம் வரவு!!

 
money

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் விடுபட்டவர்களுக்கான, நிவாரணத் தொகை ரூ.6,000 அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

govt

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. உயிரிழப்பும் ஏற்பட்டது. கோடிக்கணக்கான  பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன.  இதன் காரணமாக சென்னை , காஞ்சிபுரம், தூத்துக்குடி , நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ₹6000 வழங்கப்பட்டது. இதில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. 

stalin

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய மிக்ஜாம் புயல் நிவாரணமாக, குடும்ப அட்டை இல்லாதவர்கள் தனியாக விண்ணப்பித்த நிலையில், அவர்களின் வங்கிக்கணக்குகளில் ₹6000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது

5 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதியானோருக்கு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.