மதுரை சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்தில் 10 பேர் பலி - ஓபிஎஸ் இரங்கல்

 
op

மதுரை சுற்றுலா ரயில் விபத்தில் 10 பேர் பலியான நிலையில் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் , லக்னோ – இராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ஆன்மீக சுற்றுலா இரயில் மதுரை இரயில் நிலையத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர், 25 பேர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றோர் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் 
பிராத்த்திக்கிறேன். 


காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட தேவையான உதவிகளை செய்யவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.