தமிழகத்தில் 10% பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 
siruneerakam

தமிழகத்தில் நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு குறித்தான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் 10% பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.  

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனரகம் சார்பில் நாள்பட்ட சிறுநீரக நோய் பரவல் குறித்து கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் குறித்தான தரவுகள் இல்லாத காரணத்தினால் கணக்கெடுக்கும் பணியானது பிப்ரவரி மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர் பெரியவர்களிடையே இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. தற்போதுள்ள மனிதவளத்தை கொண்டு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகத்தால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வினை சென்னை மருத்துவ கல்லூரியின் சிறுநீரகவியல் துறையும் இணைந்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கு தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் நிதி அளித்ததோடு, 1 மருத்துவ அதிகாரி, 1சுகாதார செவிலியர், 1 சுகாதார ஆய்வாளர், 1 ஆய்வக நுட்புனர் மற்றும் 1 துணை பணியாளர் ஆகியோர் அடங்கிய 92 ஆய்வுக் குழுக்கள் தரவு சேகரிப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டனர். சிறியவர்கள் உட்பட 5310 பேர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர்.

siruneerakam

ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ரத்த சிவப்பணுக்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மாதிரிகளை பொது சுகாதார ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 4741 பெயரில் 455 பேருக்கு சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்படையும் நிலை ஆரம்ப நிலையில் உள்ளது. சிறுநீரகத்தில் இருக்கும் புரதம் வெளியேறும் தன்மை 367 பேருக்கு உள்ளது. இதுவும் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக, 4741 பேருக்கு பரிசோதனை செய்தில் 934(19.7%) பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஆரம்ப கட்ட கணக்கெடுப்பின் மூலம் 5ல் 1 க்கு சிறுநீரக பாதிப்பிற்கான அளவு அதிகரித்துள்ளது. இது குறிந்த விழிப்புணர்வு அவசியமானதாக உள்ளது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த போன்ற இனைநோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை மேற்கொள்வதோடு, தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். 

ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்த நபர்களுக்கு 3 மாதங்களுக்குப் பிறகு பின்தொடர்ந்து மறுபரிசோதனை செய்யப்படும். சிறுநீரக செயல்பாடுகள் சீரான முறையில் இல்லையென்றால், அவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பது உறுதி செய்யப்படும். இந்த ஆய்வின் மூலம், 10% பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதனால், இந்த ஆபத்தான நிலையை உணர்ந்து, தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.