500-க்கு 201 மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை

 
suicide suicide

விருத்தாசலம் அருகே 10 வகுப்பு பொதுத் தேர்வில், மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல் அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

suicide

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்த பிரபு -தேவி தம்பதியினரின் இரண்டாவது மகள் சிவானி ஸ்ரீ. இவர் கோ.ஆதனுர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்த நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. இதில் மாணவி சிவானி ஸ்ரீ, தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், 500 க்கு - 201 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்ததால், மிகவும் குறைவான மதிப்பெண் வந்துவிட்டது எண்ணி மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் கேரளாவில் பணிபுரிந்து வரும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால், மாணவி மின்விசிறியில் சேலையை மாட்டி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மாணவி தூக்கில் பிணமாக, தொங்குவதைக் கண்டு கூச்சலிட்டு கதறி அழுதனார்.  இதுகுறித்து தகவல் அறிந்த விருதாச்சலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி தேர்ச்சி அடைந்து இருந்தும், குறைவாக மதிப்பெண் எடுத்த காரணத்தால்,  மன உளைச்சலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.