#Breaking சென்னை தொழிலதிபர் வீட்டல் 1,000 கிலோ தங்கம் கொள்ளை!!

 
gold

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் 1000 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gold

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் 1000 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  தொழிலதிபர் சாய் வெங்கட் நேபாளம் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற நிலையில், மாற்று சாவியை பயன்படுத்தி திருட்டு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.  இந்த கொள்ளை சம்பவத்தில் வீட்டில் வேலைபார்த்த 4 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தொழிலதிபர் கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வெளிநாடு சென்றிருந்த நிலையில், மாற்று சாவி போட்டு நகைகளைக் கொள்ளையடித்தாகப் புகாரில்  குறிப்பிட்டுள்ளார். 

gold

தொழிலதிபர் சாய் வெங்கட் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.