10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் - வருகிற 14ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்

 
School Education

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 14ம் தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியாகியது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல்நிலை கல்வியில் சேரும் வகையில், அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
 
இந்நிலையில், தற்போது துணை தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.மாணவ - மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில், வரும் 14ம் தேதி காலை, 10:00 மணி முதல் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில், சான்றிதழ்கள் பெறலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.