11 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு !!

 
fisher

ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கடற்படையால் கடந்த மாதம் 11 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.  ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி,  மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 11 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்,  அவர்கள் விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

arrest

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் நாள் ஒன்றிற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், மீனவர்களின் இந்த சிக்கலை போக்க, மத்திய, மாநில அரசுகள் நிரந்தரமான தீர்வை அமைத்து தரவும் கோரிக்கை விடுத்தனர்.

fisher

இந்நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.