தமிழகத்தில் ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

 
கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் போங்க – எச்சரிக்கும் மத்திய அரசு!

தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

ஏடிஸ் எனப்படும் கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.  சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.  சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கொழு ஒழிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. காய்ச்சலால் அவதிப்படும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வேகமாக பரவுகிறது டெங்கு காய்ச்சல்! – அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இன்று வரை 201 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யபட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது