சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தாக 118 வழக்கு

 
வெடி

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

பட்டாசு வெடி சத்தம் குறைந்தது எப்படி? | Dinamalar

தீபாவளி பண்டிகையானது இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தீபாவளி நாளின் போது காலை 6மணி முதல் 7மணி வரையிலும், இரவு 7மணி முதல் 8மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி சென்னை காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளது. சீன பட்டாசுகள் மற்றும் 125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என  காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சென்னை காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் தீபாவளி நாளான இன்று சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக நேற்றிரவு முதல் இன்று காலை வரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்தது, அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்குபதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையானது உயரும் என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.