உள்ளடி வேலை ; சுயேட்சையாக போட்டி - அதிமுகவில் இருந்து 12 பேர் நீக்கம்!!

 
admk

செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

op

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.  ஒருபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் தேர்தலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.  இந்த சூழலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளில்  போட்டியிட, வாய்ப்பு கிடைக்காதவர்கள் சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர். சிலர் தங்கள் கட்சியினருக்கு எதிராகவே உள்ளடி வேலைகளில்  ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திமுகவில் மட்டுமே கடந்த 2 நாட்களில் 100ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

ops eps

இந்நிலையில் அதிமுகவிலிருந்து மேலும் 12 பேர் கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட புகாரில் செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.