"1.20 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்" - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

 
senthil balaji

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். 

eb

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுவரை 1.20 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும்.  34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 15,866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன் மின் இணைப்பு முழுமையாக அளிக்கப்படும்.மின் கட்டண உயர்வால் மின்சார துறைக்கு ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார். 

senthil


தொடர்ந்து பேசிய அவர், நான் கேட்ட கேள்வி வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்று தான்;  மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இருக்காது. அண்ணாமலை வாங்கிய வாச்சுக்கான ரசீதை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும்.  அண்ணாமலை அவர்சொத்து பட்டியலை தேர்தலின் போது ஏற்கனவே வெளியிட்டுள்ளார் என்றார்.