துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டு பாய்ந்து 13 வயது சிறுவன் படுகாயம் - தீவிர சிகிச்சை

 
tn

செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து 13 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டில் ரைபிள் கிளப் என்ற பெயரில் துப்பாக்கிச் சுடும் பயற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் ஏராளமானோர் துப்பாகிச் சுடும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், துப்பாகிச் சுடும் பயிற்சியின் போது துப்பாக்கிக் கொண்டு அங்கிருந்த 13 வது சிறுவனின் மீது எதிர்ப்பாராதவிதமாக பாய்ந்ததாக கூறப்படுகிறது. ஏர் கண் வெடித்து அலுமினிய குண்டு சிறுவனின் பின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் அந்த சிறுவனின் தலையில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கிய நிலையில், அந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அந்த சிறுவனுக்கு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டு பாய்ந்து 13 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.