13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

 
sexual abuse

அரியலூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் தா.பழுர் அருகே உள்ள கோடாலி கருப்பூரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வகணபதி(21) என்பவர் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

arrest

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் சென்று விசாரித்தபோது, அவர்களுக்கு செல்வகணபதி மற்றும் அவரது உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், ஜெங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார்  செல்வகணபதி மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக செல்வகணபதியின் உறவினர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.