பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா - அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்!!

 
tn

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வளாகத்திற்குள் வீரசக்கதேவி ஆலயம் அமைந்துள்ளது.இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டு 13மற்றும் 14 ஆம்  தேதிகளில் நடைபெறவுள்ள  வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நாளை மாலை 6 மணி முதல் மே 15ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

tn

144 தடை உத்தரால்  5  அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும் , தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் , பிற மாவட்டங்களில் இருந்தும், கலந்துகொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை கொண்டுவருவதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக திருவிழாவுக்கு கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
tn

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் ,தினசரி வாகனங்கள் ,அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ,சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள் ,சரக்கு வாகனங்கள் ,தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றுக்கு தடை இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவிழாவில் ஏதேனும் கூட்டங்கள் நடத்தவும் , அன்னதானம் வழங்கவும்,  ஊர்வலம் செல்லவும் முன்னதாகவே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி  அனுமதி பெற வேண்டும் என்றும்,  இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.