"2018இல் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன" : டிஜிபி சொன்ன தகவல்!

 
dgp sylendra babu

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்தன என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

Sylendra babu

தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு மாவட்ட வாரியாக கருத்தரங்குகளில் நடத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார்.  இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டிஜிபி சைலேந்திரபாபு,  அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் காவல் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ளது.  தமிழகத்தில் 84 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.  கடந்த  2018 ஆம் ஆண்டில் தான் 18 காவல் நிலைய மரணங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது.

dgp sylendrababu

இது தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  12 வழக்குகளில் மட்டுமே போலீசாரின் தவறு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளது.  10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டாலும் 12 மரணங்கள் மட்டுமே போலீசாரால் நிகழ்ந்துள்ளன என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர் . தமிழகத்தில் இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் போது உயிரிழக்கக் கூடாது என்று முதலமைச்சரும் உத்தரவிட்டார். அதன் பெயரிலேயே விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன என்றார்.