தமிழக மீனவர்கள் 15 பேர் விடுவிப்பு

 
tn

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

fishermen

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை 8 ஆம் தேதி மீன்பிடிப்பதற்காக அனுமதி சீட்டு பெற்று,  சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கடந்த 9 ஆம்  தேதி அதிகாலை நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசை படகுகளையும்,  அதிலிருந்த 15 மீனவர்களையும் கைது செய்தனர்.  அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்ற இலங்கை கடற்படையினர் , யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். வரும் 24ஆம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

fisher
இந்நிலையில்  இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவித்தது. மீனவர்கள் 15 பேரும் ஒரு இரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி  தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.