ஓமைக்ரான் பரவல் : முன்னெச்சரிக்கையாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கீடு..

 
Rajiv Gandhi Hospital

ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

omicron

ஓமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .  12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பலத்த கண்காணிப்புகளிலேயே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் , தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுகின்றனர். 

hospital besd

இந்நிலையில் தற்போது, ஓமைக்ரான் வைரஸ்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 150 படுக்கைகள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 15 படுகைகள் ஒதுக்கீடு செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.