தமிழகத்தில் 17 ஐ.பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..
தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மேற்கு மண்டல ஐ.ஜியாக செந்தில் குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதுவரை மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த பவனீசுவாய் காவல் தலைமையிட ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா நெல்லை மாநகர ஆணையராகவும், மகேஷ் குமார் ரத்தோட் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொறுப்பு ஐபிஎஸ் அதிகாரி ஆர்.தினகரனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது .

சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மத்திய குற்ற பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில் குமார் சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஐ.ஜியாக இருந்த சாமுண்டீஸ்வரி சென்னை காவல் தலைமையிட ஐ.ஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை பெருநகர வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ் குமார் மற்றும் சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக ஐ.பி.எஸ் அதிகாரி நஜ்முல் ஹூடா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் சரக டி.ஐ.ஜியாக என்.தேவராணி ஐ.பி.எஸ்., அதிகாரியும், சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையராக சரோஜ்குமார் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


