அத்திப்பள்ளி பட்டாசு கிடங்கு வெடி விபத்து - 2 பேர் கைது

 
athipalli

அத்திப்பள்ளியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியில் நவீன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். இவர் தனது பட்டாசு கடைக்கு  கண்டெய்னர் வாகனத்திலிருந்து பட்டாசு பாக்ஸ்களை இறக்கும்போது எதிர்பாராத விதமாக தீப்பற்றி பட்டாசுகள் வெடித்து சிதறியது. பட்டாசு என்பதால் தீப்பொறி பரவி அடுத்தடுத்து கடைகளுக்கும் தீ பரவி அருகில் இருந்த மதுபான கடைகளுக்கு பரவியது. இதையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மூன்றுக்கும் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் பட்டாசு கடை முழுவதும் பரவியதால் தற்போது அங்கு வான் உயர புகை மூட்டமாகவே காணப்பட்டது. இந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். 

arrest

இந்த நிலையில், அத்திப்பள்ளியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திப்பள்ளி பட்டாசு கடை உரிமையாளர் நவீன் ரெட்டி மற்றும் ராமசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு குறைபாடு, கவனக்குறைவு காரணமாக பட்டாசு கடையில் விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.