வாணியம்பாடியில் 2 பேருந்துகள் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சோகம்

 
வாணியம்பாடியில் 2 பேருந்துகள் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சோகம்

வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேரு மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.மேலும் 64 பேர் படுகாயமடைந்தனர். 

Image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலை பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சென்னை பெங்களூர் சாலைக்கு சென்று அங்கே சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு கிராமிய போலீசார் விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 64 பேர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி பலியான அரசு பேருந்து ஓட்டுநர் உளுந்தூர் பேட்டையை பகுதியை சேர்ந்த ஏழுமலை, வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியா சேர்ந்த முஹம்மத் பைரோஸ் (தனியார் சொகுசு பேருந்து நடத்துநர், வாணியம்பாடி பைபாஸ் பேருந்து நிலையத்தில் ஏரியவர்), சித்தூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார், கர்நாடகா மாநிலம் கோலர் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான முஹம்மத் நதீம், மற்றும் சென்னையை சேர்ந்த கிருத்திகா என்ற பெண் உட்பட 5 பேரின் சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Image

விபத்தில் படகாயம் அடைந்த 64 பேர்களில்  27 பேரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ராஜு என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விரைந்து சென்று ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், வேலூர் சரக காவல் துணைத்தலைவர் முத்துசாமி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, நகர கழக செயலாளர் சாரதி குமார் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு கேட்டுக்கொண்டனர்.

Image

மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த கிருத்திகா தனது இரு குழந்தைகளுடன் பெங்களூரில் இருந்த சென்னை சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில்  அவரது இரு குழந்தைகளும் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.