"போலீஸ் பாதுகாப்புடன் வந்து கல்லூரி தேர்வு எழுதினேன்" - மாநில கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

 
tn

மாநிலக்கல்லூரியில் 2000 பேர் அமரும் வகையில் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து, அத்தகைய அறிவு சொத்துக்களை மாநில கல்லூரி உருவாக்கி வருகிறது . விளிம்பு நிலை மக்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகம் படிக்கும் கல்லூரி மாநில கல்லூரி. சமூக நீதி கல்லூரியாக திகழ்கிறது மாநில கல்லூரி.  நான் படித்த மாநில கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சீனியர் என்ற முறையில் மாணவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன்" என்றார்.

tn

தொடர்ந்து பேசிய அவர், "மிசா சட்டத்தை எதிர்த்ததால் அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. மிசா காலத்தில் சிறையில் இருந்த போது போலீஸ் காவலுடன் வந்து இந்த கல்லூரியில் தேர்வு எழுதினேன்.
பெண்கள் படிக்க வேண்டும், பட்டங்களை பெற வேண்டும், தகுதிகேற்ற வேலைக்கு செல்ல வேண்டும்; பெண்கள் படிப்பது வெறும் வேலைக்குச் செல்வதோடு இல்லாமல் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். 

mk stalin
மாநில கல்லூரியில் 2000 பேர் அமரும் வகையில் ‘கலைஞர்’ பெயரில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும், 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் விடுதி அமைக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடஒதுக்கீடு. ஆனால் 56% பெண்கள் பொறுப்புகளை அடைந்துவிட்டார்கள். இப்படி 50 ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க முடியுமா? முடியாது. 'திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்பது இது தான்"  என்றார்.