மின் கட்டணம் அதிரடி உயர்வு- வீடுகளுக்கு 100 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 25 பைசா வசூல்

 
eb bill eb bill

கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்வதற்காக, புதுச்சேரியில் மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யபடும் என்று மின்துறை அறிவித்து உள்ளது.

EB

புதுச்சேரி, கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் புதுவையில் ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் உத்தேச மின் கட்டணம் அறிவிக்கப்படும் தொடர்ந்து ஒழுங்குமுறை ஆணைய்ர் முன்னிலையில் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படும். தொடர்ந்து மின் கட்டணம் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும். இதுபோல் நடப்பு ஆண்டுக்கான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய புதுவை அரசின் மின்துறை  கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளது.

இதன்படி 2023 -24ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்காக மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. விவசாயம், சிறு குடிசைகள் தவிர்த்து மற்ற அனைத்து மின் நுகர்வோரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். நுகர்வோர்வாரியாக முதல் காலாண்டுக்கு வசூலிக்கப்பட உள்ள மின் கட்டண விவரம் வருமாறு, வீடுகளுக்கு 100 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 25 பைசா, 101 முதல் 200 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 36 பைசா, 201 முதல் 300 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 40 பைசா, 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 40 பைசாவும், வர்த்தக மின் கட்டணம் 100 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 66 பைசா, 101 முதல் 250 வரை யூனிட்டுக்கு 77 பைசா, 250 யூனிட்டுக்கு மேல் 79 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.

இதுபோல் தெருவிளக்கு யூனிட்டுக்கு 78 பைசா, எல்டி தொழிற்சாலை யூனிட்டுக்கு 70 பைசா, எல் டி தண்ணீர் தொட்டி யூனிட்டுக்கு 72 பைசா, குடிசைத் தொழிலுக்கு 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 25 பைசா, 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 36 பைசா, 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு 40 பைசா, 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 40 பைசா. எச்டி தொழிற்சாலைக்கு யூனிட்டுக்கு 60 பைசா, எச்டி வர்த்தகம் யூனிட்டுக்கு 62 பைசா, விளம்பர பலகைகளுக்கு யூனிட்டுக்கு 59 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களுக்கு முறையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வசூலிக்கப்படும். இதற்கான அறிவிப்பை புதுவை அரசின் மின்துறை வெளியிட்டுள்ளது.