தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை

 
gn

தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னன்  ராஜ ராஜ சோழனின் 1038 வது சதய விழா வருகிற அக்டோபர் 24ஆம் தேதி தொடங்க உள்ளது.  இதற்காக இன்று பந்தக்கால் நடும்  நிகழ்ச்சி நடைபெற்றது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கும் நிலையில் சதய நட்சத்திர நாளான 25ஆம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

yn

இந்த விழாவையொட்டி பட்டிமன்றம், நாட்டியம் ,நாடகம் ,திருமுறை அரங்கம் ,கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.  அத்துடன் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன.

ny

இந்நிலையில் ராஜராஜ சோழ மன்னரின் 1038வது சதய விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.