மருத்துவர் குடும்பத்தை கட்டிப்போட்டு 280 பவுன் நகை கொள்ளை - ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு!!

 
ttn

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் மகப்பேறு மருத்துவமனை நடத்திவருகிறார் சக்திவேல். 52 வயதான இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். சக்திவேல் உடன் அவரது தந்தை வெள்ளையப்பன் .தாய் வேதநாயகம் ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக சக்திவேல் இந்த இடத்தில் மருத்துவமனை நடத்தி வருவதாக தெரிகிறது. நேற்று இரவு மருத்துவம் பார்த்த பிறகு கிளினிக்கைமூடி விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார் சக்திவேல்.

yn

இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டுக்குள் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்துள்ளது . வீட்டின் முன்புறம் தூங்கிக்கொண்டு இருந்த வெள்ளையப்பன் மற்றும் அவரது மனைவியை மர்ம கும்பல் கட்டி போட்டுள்ளனர். பிறகு அறையில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி ராணியையும் கட்டிப்போட்ட கொள்ளையர்கள் .பீரோவை திறந்து 280 பவுன் நகை .25 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு காரில் தப்பி உள்ளனர்.

tn

இதன்பின் போராடிக் கட்டை அவிழ்த்த சக்திவேல் ஒட்டன்சத்திரம் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொள்ளை  நடந்த விதம் குறித்து கேட்டறிந்தனர். அத்துடன் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு. கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைந்து பழுதாகி விட்டதை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் மருத்துவர் சக்திவேலுக்கு நெருக்கமானவர்கள் அல்லது வீட்டிற்கு தினமும் வந்து செல்பவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.