பள்ளி வேன் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - பள்ளி வளாகத்தில் நடந்த துயரம்!!

 
tn

சென்னை, வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது.  இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் தீக்ஷித் என்ற மாணவன்.  இவர் இன்று காலை பள்ளி வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்கு சென்று கொண்டு இருந்தார்.  அப்போது பள்ளி வேனில் மறந்து வைத்த தன்னுடைய பொருளை எடுக்க வேன்  அருகில்  சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வேன்  ஓட்டுநராக பணிபுரியும் பூங்காவனம் என்பவர் பள்ளி வேனை  பின்னோக்கி எடுத்துள்ளார்.

tn

மாணவன் வருவதை கவனிக்காத ஓட்டுநர் பூங்காவனம் அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதால் மாணவன் மீது மோதியுள்ளது . இதில் படுகாயம் அடைந்த மாணவன் தீக்ஷித் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

tn

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகர் காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பள்ளியின் ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.