ஸ்ரீபெரும்புதூரில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

 
RAID TTN

ஸ்ரீபெரும்புதூரில் ப்ளெக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

சென்னை மற்றும் புறநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 21ஆம் தேதி முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். துரைப்பாக்கம், பள்ளிக்கரணை ,நீலாங்கரை, எண்ணூர், ஓஎம்ஆர், நாவலூர் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்னார் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உட்பட உபகரணங்களை சப்ளை செய்து வரும் நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.  வரி ஏய்ப்பு  புகாரில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை நடத்தியது. இதேபோல் நேற்று  ஸ்ரீபெரும்புதூரில் 10க்கு மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிளக்ஸ் இந்தியா நிறுவனம் தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். 

இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறாது.வருகிறது. இந்த சோதனையானது 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. ப்ளெக்ஸ் இந்தியா நிறுவனத்துக்குத் தொடர்புடைய இடங்களான சென்னை, ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்