நயினார் நாகேந்திரனுக்கு 2ஆவது முறையாக சம்மன்
Apr 25, 2024, 10:26 IST1714021019524
தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாருக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ₹4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கடந்த 22ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாள்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார். நயினார் நகேந்திரனின் வழக்கறிஞர் தாம்பரம் ஆய்வாளர் பால முரளியை சந்தித்து கடிதத்தை வழங்கினார்.