செங்கல்பட்டில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

 
train

செங்கல்பட்டு மாவட்டம்  ஊரப்பாக்கம் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூன்று பேர் மீது மின்சார ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Etv Bharatசெங்கல்பட்டில் மின்சார ரயில் மோது 3 சிறுவர்கள் உயிரிழப்பு.

கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் பல குடும்த்தினர் குடிபெயர்ந்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்கா, கடற்கரைக்கு சுற்றுலா செல்ல சிறுவர்கள் கர்நாடகாவில் இருந்து சென்னை அடுத்த ஊரப்பாக்கம் உறவினர் வீட்டிற்க்கு வருகை தந்துள்ளனர். இன்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளம் கடக்கும் போது மின்சார ரயில் மோதி மூன்று சிறுவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிறுவர்கள் கை, கால் உடல் தனித்தனியாக சிதறியுள்ளது. ரயில் விபத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் மூன்று சிறுவர்களின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிரிழந்த மூன்று சிறுவர்களில் காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என கூறப்படுகின்றது. ஊரப்பாக்கம் அருகே தண்டவாளம் கடக்கும் போது மின்சார ரயில் மோதி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த தகவலை தொடர்ந்து சிறுவர்களின் பெற்றோர்கள் கதறியும் உருண்டு பெறண்டும் அழுதனர். 

ஊரப்பாக்கம் அருகே மின்சார ரயில் மோதி சிறுவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.