மத்திய அரசு ஊழியர்களுக்கான 3% அகவிலைப்படி உயர்வு புதுச்சேரியிலும் அமல்..

 
புதுச்சேரி


 மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவையிலும்  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக  கடந்த 2020 ம் ஆண்டில்  மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதன்பிறகு  கடந்த  2021 ம் ஆண்டு ஜனவரி மாதம்  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11 % உயர்த்தப்பட்டது. அதாவது  17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 3% அகவிலைப்படி உயர்வு புதுச்சேரியிலும் அமல்..

இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்திலும் அமலுக்கு வந்தது.  பின்னர் ஜூலை மாதம்  மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன்படி  அகவிலைப்படியானது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டு கடந்த அக்டோபர் முதல் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதியில்  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும்  3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள்

இதனால் 31% இருந்த அகவிலைப்படியானது  34 சதவீதமாக அதிகரித்தது.   இது அகவிலைப்படி உயர்வானது புதுச்சேரியிலும்  அமலுக்கு வந்துள்ளது.  ஜனவரி 1 ம் தேதி முதல் முந்தேதியிட்டு  வழங்க முடிவு செய்து,  புதுவை  நிதித்துறை சார்பு செயலர் கோவிந்தராஜன் அனைத்து துறை செயலர்கள், பிராந்திய தலைமைக்கும், துறை  தலைவர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.