விழுப்புரம் அருகே கார் மோதி விபத்து : 3 பெண்கள் பலி..

 
accident

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ் பத்துப்பட்டில் கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.  

விழுப்புரம் மாவட்டம் கோடக்குப்பம்  அருகே மீன் வாங்க செல்வதற்காகப் புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் சாலையோரம்  அமர்ந்திருந்தனர். கீழ்பத்துப்பட்டு என்னும் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்திருந்தபோது, அதிகாலை 5.15 மணியளவில் சென்னை மார்க்கத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது.  இதில் புதுகுப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த  லட்சுமி(45), கோவிந்தம்(50) ஆகிய  இருவரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

dead

மேலும் நாயகம், கோமலம், கெங்கையம்மாள், பிரேமா ஆகிய 4 பெண்கள் காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் 4 பேரும்  புதுவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதனிடையே புதுச்சேரி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த கங்கையம்மாள் என்பவரும்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். கார் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கார் ஓட்டுநரை பிடித்து கோட்டக்குப்பம் போலிசார் தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.