சேந்தமங்கலத்தில் பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு - ஹோட்டலுக்கு சீல்

 
பரோட்டா

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பிரபல தனியார் ஹொட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்பட்ட பரோட்டாவை அப்பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் சாப்பிட்டு சென்றுள்ளனர். இதேபோல் ஒருசிலர் வீடுகளுக்கு பார்சல் வாங்கி சென்று சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், பரோட்டா சாப்பிட்ட பெரும்பாலானோருக்கு திடீர் உடல்நலக்குறை ஏற்பட்டது. பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்ட நிலையில், அவர்கள் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவல் அப்பகுதி முழுவதும் தீயாய் பரவிய நிலையில், இது குறித்து அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். 

இதனை தொடர்ந்து அந்த தனியார் ஹோட்டலில் அதிரடி ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் ஹோட்டலில் சுகாதாரமின்று உணவுப் பொருட்கள் தயாரித்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பரோட்ட சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சுகாராரத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.